2015-16ம் ஆண்டுக்கான தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் - வரும் 5-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
Jul 30 2016 10:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் 5-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
வருமான வரி வரம்புக்குள் வரும் நபர்கள், ஆண்டுதோறும் ஜூலை 31-ம் தேதிக்குள் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, 2015-2016-ம்ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய வருமானவரித்துறை செயலாளர் திரு. ஹஷ்முக் அதியா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜம்மு-காஷ்மீர் பிரச்னை மற்றும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, வருமான வரி கணக்க தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக, அம்மாநிலத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, அடுத்த மாதம் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.