தற்காப்புக்காகவே தங்கள் அமைப்பினர் ஆயுத பயிற்சியில் ஈடுபடுவதாக பஜ்ரங்தள் அறிவிப்பு
May 27 2016 11:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தற்காப்புக்காகவே தங்கள் அமைப்பினர் ஆயுத பயிற்சியில் ஈடுபடுவதாக பஜ்ரங்தள் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளை தாங்கள் பொருட்படுத்தபோவதில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
வடமாநிலங்களில் மிகப்பெரிய அமைப்பைக் கொண்டிருக்கும் பஜ்ரங்தள், தங்கள் தொண்டர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்து வருகிறது. அண்மைக்காலமாக இந்த பயிற்சி பல இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில், ஏராளமானோர் இப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற பயிற்சிகள் தீவிரவாத எண்ணத்தை வளர்க்கும் என்றும், இது அபாயகரமானது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள பஜ்ரங்தள் அமைப்பு, தற்காப்பு கருதி தங்கள் தொண்டர்கள் பயிற்சியில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளது.