ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே கடும் வாக்கு வாதம்
May 27 2016 8:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் நீண்ட அமளி நிலவியது.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் ஹந்துவாரா துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பினர். ஆளும் கட்சிக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பியதுடன் சபாநாயகரின் இருக்கை அருகே சென்று ரகளையில் ஈடுபட்டனர். ஆளும்கட்சி உறுப்பினர்களும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.