ஜம்மு-காஷ்மீரில் 2 இடங்களில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்துஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
May 27 2016 9:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் Baramulla மாவட்டம் Tangmarg பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படை வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். Kanchipora என்ற கிராமத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதலில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களை நோக்கி தீவிரவாதிகள் சுடத்தொடங்கினர். பதிலுக்கு வீரர்களும் திருப்பிச் சுட்டனர். இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் 2 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்றிரவு Pulwama மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம்மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் வீரர் ஒருவர் காயமடைந்தார். இதனிடையே, Naugam பகுதியில் அமைந்துள்ள எல்லை கட்டுப்பாடு கோடு வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தப்பிச்சென்ற தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.