ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை - சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு
May 27 2016 9:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய நிதி அமைச்சர் திரு. அருண்ஜேட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு. ரகுராம் ராஜன் பதவி விலக வேண்டும் என பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி வருகிறார். அவர் பதவி விலகாவிட்டால், பிரதமர் அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் சுவாமி வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், டெல்லியில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் திரு. அருண்ஜேட்லி, ரகுராம் ராஜனை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். தனிப்பட்ட நபர்கள் மீது குறைகூறி கருத்துகள் வெளியிடுவதை தாம் ஆதரிக்கவில்லை என்றும், ரிசர்வ் வங்கி சுயேச்சையாக செயல்படும் ஒரு அமைப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் மீது கருத்து தெரிவிக்கலாமே தவிர, அதன் தலைவர் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுப்பது முறையற்ற செயல் என்றும் திரு. அருண்ஜேட்லி தெரிவித்தார்.