டெல்லியில் 13 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ரயில் பாதை அருகே வீசப்பட்டார்

May 26 2016 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் 13 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ரயில் பாதை அருகே வீசப்பட்டார். இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

தென்கிழக்கு டெல்லியில் புல்பிரஹல்லாத்பூர் என்ற இடத்தில் இச்சிறுமி தனது உறவினருடன் வசித்து வந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமி, கடந்த 17-ம் தேதி முதல் காணாமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, ரயில் பாதை அருகே கிடந்தது மறுநாள் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அச்சிறுமி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினர். டெல்லியை உலுக்கிய இச்சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் மருத்துவமனைக்குச் சென்று சிறுமியையும், அவரது குடும்பத்தினரையும் பார்த்து விசாரித்தார். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்கை சந்தித்து டெல்லி சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து பேசவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மகளிர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இதற்கிடையே, பாலியல் பலாத்காரம் செய்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00