பஞ்சாப் பதான்கோட் விமானப்படைத் தளத்தில் தாக்குதல் நடத்தியதைப்போல, இந்தியாவில் மேலும் பல தாக்குதல்கள் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக ராணுவ புலனாய்வுத்துறை அதிர்ச்சித் தகவல்

May 25 2016 10:03AM
எழுத்தின் அளவு: அ + அ -

பஞ்சாப் பதான்கோட் விமானப்படைத் தளத்தில் தாக்குதல் நடத்தியதைப்போல, இந்தியாவில் மேலும் பல தாக்குதல்கள் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக ராணுவ புலனாய்வுத்துறை அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமானப்படை தளத்திற்குள், கடந்த ஜனவரி மாதம் 2-ம் தேதி, திடீரென நுழைந்த 6 தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். அவர்களது தாக்குதலை முறியடிக்கும் வகையில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில், தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை வீரர்கள் 7 பேர் வீரமரணமடைந்தனர்.

இதுபோன்ற அதிரடி தாக்குதல்களை மேலும் பல இடங்களில் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக ராணுவ புலனாய்வுத்துறை அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதல்களை நடத்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமைத் தளபதி Awais Mohammed மலேசியா வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சதியைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. முன்வந்துள்ளதாகவும், புலனாய்வுத்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00