உத்தரகண்ட் மாநிலத்தை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வனப்பகுதியிலும் தீ விபத்து
May 2 2016 9:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரகண்ட் மாநிலத்தை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வனப்பகுதியிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனை அணைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரில் முக்கிய நெடுஞ்சாலையையொட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. அங்கு தற்போது முதல்முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோடை வெப்பம் காரணமாகவும், காற்றின் வேகத்தாலும் தீ வேகமாக பரவி வருகிறது. எனவே வனத்துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு, தீயை அணைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த வனப்பகுதி சாலையையொட்டி அமைந்திருப்பதால் மனித தவறு காரணமாக இந்த தீ விபத்து நேரிட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது கடுமையான கோடை வெப்பம் நிலவுவதால், வனப்பகுதிகளில் இதுபோன்ற தீ விபத்துகள் நேரிடுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.