இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதலாவது உளவு நீர்மூழ்கி கப்பல் "கல்வாரி", சோதனை ஓட்டத்தை தொடங்கியது
May 2 2016 10:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதலாவது உளவு நீர்மூழ்கி கப்பல் "கல்வாரி", சோதனை ஓட்டத்தை தொடங்கியுள்ளது.
மும்பையில் உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான மஜகான் கப்பல் கட்டும் தளத்தில் இந்த நீர்மூழ்கி கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் முதல் முறையாக நேற்று தொடங்கியது. மும்பை கடலோர பகுதியில் நடைபெற்ற இந்த சோதனை ஓட்டத்தையடுத்து, அடுத்த சில மாதங்களில் பல்வேறு பரிசோதனைகளுக்கு "கல்வாரி" நீர்மூழ்கி கப்பல் உட்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, ஏவுகணை செலுத்துதல், கடலில் ஆழச் செல்லுதல், ஓசை சமிக்ஞைகள் போன்ற பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனையடுத்து, இந்நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்படும். இதேபோன்று, 6 நீர்மூழ்கி கப்பல்களை பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.