டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு புறப்பட்டுச் சென்ற ஃபைசாபாத் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரம்
May 2 2016 7:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு புறப்பட்டுச் சென்ற ஃபைசாபாத் எக்ஸ்பிரஸ் ரயில், தடம் புரண்டு விபத்துக்குள்ளானதையடுத்து, அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
டெல்லியில் இருந்து நேற்று மாலை உத்தரப்பிரச்தேச மாநிலம் ஃபைசாபாத் நகருக்கு புறப்பட்டுச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், அம்மாநிலத்தின் Hapur மாவட்டத்தில் Garmukteshwar-Kankather ரயில் நிலையங்களுக்கு இடையே இரவு ஒன்பது மணி அளவில் தடம் புரண்டது. இதில், ஃபைசாபாத் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள், தண்டவாளத்தை விலகி நின்றன. இந்த விபத்தில் 15 பயணிகள் காயமடைந்ததாகவும், அவர்கள் அனைவரும் மீரட்டில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டன. இந்த விபத்து காரணமாக, டெல்லி - மொரதாபாத் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.