தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வட்டி விகிதம் அதிகரிப்பு - மத்திய அரசு முடிவு
Apr 30 2016 8:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி, வட்டி விகிதம் 8 புள்ளி 8 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.
ஊழியர்கள் 58 வயது அடையும் வரை வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணத்தை எடுக்கக்கூடாது என தடை விதித்து மத்திய அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. மேலும், பட்ஜெட் அறிவிப்பில், வருங்கால வைப்பு நிதியில் இருந்து பெறப்படும் பணத்திற்கு, வரிவிதிக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. இந்த 2 திட்டங்களுக்கும் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள், நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனையடுத்து, இந்த 2 திட்டங்களும் மத்திய அரசால் திரும்பப்பெறப்பட்டன. இந்நிலையில், 2015-2016-ம் ஆண்டுக்கு வருங்கால வைப்பு நிதியில் இருந்து பெறப்படும் பணத்திற்கு வட்டி விகிதத்தை 8 புள்ளி 8 சதவீதமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதனை, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு.பண்டாருதத்தாத்ரேயா டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.