இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கடத்தலில் ஈடுபட முயன்ற 4 பேர் சுட்டு கொலை -போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை கைப்பற்றி பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை
Feb 7 2016 1:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சாப் மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லை அருகே, கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடமிருந்து 10 கிலோ ஹெராயின் மற்றும் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள Khem Karan பகுதியில், இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே, இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருட்களுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய இருவரையும், அவர்களிடம் போதைப்பொருள் வாங்க வந்த இரண்டு இந்தியர்களையும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதால், எல்லைப் பாதுகாப்பு படையினர் எதிர்தாக்குதல் நடத்தினர். இதில், பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவர் உட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து 10 கிலோ ஹெராயினும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.