2 நாள் பயணமாக இலங்கை சென்றார் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் : இந்தியா-இலங்கை கூட்டுக்குழு கூட்டத்தில் பங்கேற்பு

Feb 5 2016 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் 2 நாள் பயணமாக இன்று இலங்கை சென்றார். கொழும்புவில் நடைபெறவுள்ள இந்தியா-இலங்கை கூட்டுக்குழு கூட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார்.

2 நாள் பயணமாக இலங்கை சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜை, கொழும்பு விமான நிலையத்தில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. மங்கள சமரவீரா வரவேற்றார். திருமதி சுஷ்மா ஸ்வராஜுடன் மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் திரு.ஜெயசங்கரும் சென்றுள்ளார். இலங்கையில் அதிபர் சிரிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்கட்சித் தலைவர் திரு. ஆர். சம்பந்தன் ஆகியோரையும் சுஷ்மா சந்தித்து பேசவுள்ளார். ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து திருமதி. சுஷ்மா ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், இந்தியா-இலங்கை கூட்டுக் குழு கூட்டத்திலும் அவர் பங்கேற்று உரையாற்றுகிறார். இருநாடுகளுக்கு இடையே வீட்டு வசதி, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பு குறித்தும் இருநாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00