புதுச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பேரிடர் காலங்களில் தற்காத்துக்கொள்வது குறித்து மாணவிகளுக்கு பயிற்சி
Feb 5 2016 8:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பேரிடர் காலங்களில் தற்காத்துக்கொள்வது குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அரக்கோணம் பேரிடர் மீட்பு படை சார்பில் பேரிடர் காலங்கள் மற்றும் அவசர காலங்களில் முதலுதவி சிகிச்சை மேற்கொள்வது தொடர்பான விழிப்புணர்வை மாணவ-மாணவிகளிடம் ஏற்படுத்தும் நோக்கில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் சார்பில் விழிப்புணர்வு மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பேரிடர் காலங்களிலும், அவசர காலங்களிலும் எவ்வாறு முதலுதவி சிகிச்சைகளை மேற்கொள்வது என்றும் அப்போது பாதிக்கப்பட்டவர்களக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மாணவிகளுக்கு செயல் விளக்கமும், பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என மாணவிகள் தெரிவித்தனர்.