புதுச்சேரியில் கடலோர காவல்படைக்குச் சொந்தமான கப்பல் தளம் கட்டுமானப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டம்
Feb 5 2016 8:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் கடலோர காவல்படைக்குச் சொந்தமான கப்பல் தளம் கட்டுமானப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினம் மீனவ கிராம பகுதியில், இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான கப்பல் நிறுத்த தளம் அமைப்பதற்கான பணி தொடங்கியுள்ளது. 36 ஏக்கர் நில பரப்பில் அமையவுள்ள இத்திட்டத்தால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அப்பகுதியை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே, பெண் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.