உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் "Zika" வைரசுக்கு எதிராக, முதன்முறையாக தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை - சோதனைக்கு தயாராக இருப்பதாக அறிவிப்பு
Sep 3 2016 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் "Zika" வைரசுக்கு எதிராக, முதன்முறையாக தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இம்மருந்து, சோதனைக்கு தயாராக இருப்பதாக அதனை தயாரித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளைத் தாக்கும், கொடிய "Zika" வைரஸ், கரீபியன் மற்றும் அமெரிக்க நாடுகளில் வெகுவேகமாக பரவி வருகிறது. Aedes வகை கொசுக்களால் பரவும் Zika வைரஸ், இதுவரை 23 நாடுகள் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு பிரசில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்கள் மூலமாகவே பரவும் இந்த வைரசுக்கு, இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்காமல் இருந்தன.
இந்நிலையில், உலகையே அச்சுறுத்திவரும் "Zika" வைரசுக்கு எதிராக, முதன்முறையாக தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறுவனத் தலைவர் டாக்டர் Krishna Ella, "Zika" வைரஸ் எதிர்ப்பு மருந்து கண்டுபிடிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், இதற்கான பணிகள் ஒருவருடத்திற்கு முன்பே தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த வைரசுக்கு எதிராக 2 தடுப்பூசிகளை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அதில் ஒரு தடுப்பூசி விலங்குகளிடம் சோதனை செய்யும் கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், இந்த தடுப்பூசிக்காக உலகளாவிய காப்புரிமை கோரப்போவதாகவும் Krishna Ella தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை "Zika" வைரஸ் கண்டறியப்படாத நிலையில், இந்த புதிய தடுப்பு மருந்து உலக அளவில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.