இந்தியா - இஸ்ரேல் நாடுகள் கூட்டாகத் தயாரித்துள்ள பராக்-8 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது
Nov 28 2015 7:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இஸ்ரேல் நாடு அண்மைக்காலமாக ஏவுகணைத் திட்டங்களில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. இதைத் தொடர்ந்து இந்தத்துறையில் முன்னோடியாக விளங்கும் இந்தியாவுடன் இணைந்து, இஸ்ரேல் ஏவுகணைத் தயாரிப்புத் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இரு நாடுகளும் பராக்-8 என்ற ஏவுகணையை கூட்டாகத் தயாரித்துள்ளன. இந்த ஏவுகணை இஸ்ரேல் கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பலில் இருந்து முதன்முறையாக சோதித்துப் பார்க்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. ஏவுகணை சோதனை 100 சதவீதம் வெற்றியடைந்துள்ளதாகவும், அடுத்த 2 ஆண்டுகளில் இஸ்ரேல் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்றும் இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஏவுகணையின் அடுத்தக்கட்ட சோதனை, வரும் டிசம்பர் மாதம் இந்திய கடற்படைக்குச் சொந்தமான INS கொல்கத்தா போர்க்கப்பலில் நடைபெறவுள்ளது.