இந்திய அரசியல் சட்டம் ஒரு புனித நூல் - இந்தியா என்பதுதான் அரசின் ஒரே மதம் : நாடாளுமன்றத்தில் அரசியல் சட்டம் குறித்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
Nov 28 2015 7:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரசியல் சட்டம் குறித்த விவாதத்தில், நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய அரசியல் சட்டம் ஒரு புனித நூல் என்றும் இந்தியா என்பதுதான் அரசின் ஒரே மதம் என்றும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியதிலிருந்து இரு நாட்களாக அரசியல் சட்டம் குறித்த விவாதம் நடைபெற்றது. முன்னதாக அம்பேத்கரின் 125-வது ஆண்டு பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், அரசியலமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அரசியல் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய அரசியல் சட்டம் ஒரு புனித நூல் என்றும் இந்தியா என்பதுதான் அரசின் ஒரே மதம் என்றும் தெரிவித்தார். மேலும், நமது அரசியல் சட்டம், ஒற்றுமையான இந்தியாவை வலியுறுத்துவதுடன், அனைத்து இந்தியர்களுக்கும் கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்துகிறது என்றும் கூறினார்.