பாகிஸ்தானுடன் காஷ்மீரின் ஆக்கிரமிப்பு பகுதி இருக்கவேண்டும் என காஷ்மீரின் முன்னாள் அமைச்சர் பரூக் அப்துல்லா தெரிவித்த கருத்தால் பெரும் சர்ச்சை
Nov 28 2015 7:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீரின் முன்னாள் அமைச்சர் பரூக் அப்துல்லா, பாகிஸ்தானுடன் காஷ்மீரின் ஆக்கிரமிப்பு பகுதி இருக்கவேண்டும் என தெரிவித்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஜம்முவின் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி, பாகிஸ்தானுடன் தொடர்ந்து இருக்கவேண்டும் எனவும், அப்பகுதி இந்தியாவில் உள்ளது என்றும் தெரிவித்தார். பரூக் அப்துல்லா கருத்தால், பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணை முதலமைச்சர் நிர்மல் சிங், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி, இந்திய அரசியலமைப்புப்படி, இந்தியாவின் ஒரு பகுதி என்று கடந்த 1994 ஆண்டு பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.