சிங்கப்பூரில் அதிபர் மற்றும் பிரதமருடன் நரேந்திரமோடி சந்திப்பு : இந்தியா - சிங்கப்பூர் இடையே பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
Nov 24 2015 1:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிங்கப்பூரில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்துப் பேசினார். இந்தியா - சிங்கப்பூர் இடையே பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, தனது பயணத்தின் 2-ம் நாளான இன்று, அந்நாட்டு அதிபர் Tony Tan Keng Yam-ஐயும், பிரதமர் Lee Hsien Loong-ஐயும் சந்தித்துப் பேசினார். முன்னதாக, பிரதமருக்கு, பாரம்பரிய முறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த சந்திப்பிற்கு பின்னர், இந்தியா - சிங்கப்பூர் இடையே 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பாதுகாப்பு, இணையதள குற்றங்களை தடுப்பது, கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது என கூட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது. இரு நாடுகளிடையே தூதரக உறவுகள் ஏற்பட்டதன் 50-வது ஆண்டு தினத்தையொட்டி தபால்தலை ஒன்றும் வெளியிடப்பட்டது.