டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில், 2 விசாரணை கைதிகள் உயிரிழந்த சம்பவம் : நீதி விசாரணை நடத்த டெல்லி அரசு உத்தரவு
Oct 9 2015 11:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி திகார் சிறையில், கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில், 2 விசாரணை கைதிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்துவதற்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் பலத்த பாதுகாப்பு நிறைந்த திகார் சிறையின் ஒன்றாவது வார்டில், ஈஸ்வர், விஜய் மற்றும் ஷதப் ஆகிய 3 விசாரணை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மூவரும் நேற்று முன்தினம், சக கைதிகள் மூன்று பேரால் கடுமையாக தாக்கப்பட்டனர். இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், ஈஸ்வர், அனில் ஆகிய 2 கைதிகள் பலத்த காயமடைந்தனர். மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர்கள் உயிரிழந்தனர். மேலும், இந்த சம்பவத்தில் 6 கைதிகள் காயமடைந்தனர். மோதலில் ஈடுபட்டவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்துவதற்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.