இந்தியாவில், அனைத்து சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் - பிரதமர் வேண்டுகோள்
Oct 9 2015 8:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அனைத்து சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என பிரதமர் திரு.நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரி என்ற இடத்தில், மாட்டிறைச்சி உண்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, வன்முறைகள் நீடித்து வருகின்றன. இந்நிலையில், பீகார் மாநிலம் நவாடா என்ற இடத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் திரு.நரேந்திரமோடி, இந்த பிரச்சினை குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்தார். அனைத்து தரப்பு மக்களும் விரோத மனப்பான்மையை கைவிட்டு, நாட்டின் அமைதியை முன்னிலைப்படுத்தி ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என அப்போது அவர் கேட்டுக்கொண்டார். இதனிடையே வன்முறையால் பாதிக்கப்பட்ட தாத்ரி நகரில், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அமைதியை பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் என்.பி.சிங் தெரிவித்துள்ளார்.