ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில் சுயேட்சை எம்.எல்.ஏ. தாக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு
Oct 8 2015 11:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில் சுயேட்சை எம்.எல்.ஏ. தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் எம்.எல்.ஏக்கள் விடுதியில், சுயேட்சை எம்.எல்.ஏ. ஷேக் அப்துல் ரஷித் என்பவர் மாட்டிறைச்சி விருந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து சட்டசபையில் பிரச்னை எழுந்தது. அப்போது விருந்து கொடுத்ததாகக் கூறப்படும் சுயேட்சை எம்.எல்.ஏவை, சில எம்.எல்.ஏக்கள் சூழ்ந்து தாக்கினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து காஷ்மீர் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.