ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் தாமதமாவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் முடிவு

Aug 29 2015 7:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்தக்கோரி முன்னாள் ராணுவ வீரர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், பிரதமர் திரு. நரேந்திர மோடியை மத்திய உள்துறை அமைச்சர் சந்தித்து இந்த திட்டம் தாமதமாவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ராணுவத்தில் பணியாற்றி ஓய்புபெறுபவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும் என முன்னாள் ராணுவ வீரர்கள், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 2 மாதமாக தொடர் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் ராணுவ வீரர்கள் அடங்கிய ஒரு குழுவினர், மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினர். இதனையடுத்து, பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்து, ராஜ்நாத் சிங் இந்த திட்டம் தாமதமாவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை விரைவில் அமல்படுத்தக்கோரி முன்னாள் ராணுவ வீரர்கள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் ராஜ்நாத் சிங்கின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00