சுங்க கட்டணத்தை நீக்குவது குறித்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஒன்றாம் தேதி முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் : அனைத்திந்திய மோட்டார் போக்குவரத்து சங்கம் அறிவிப்பு
Aug 29 2015 6:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுங்க கட்டணத்தை நீக்குவது குறித்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஒன்றாம் தேதி முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அனைத்திந்திய மோட்டார் போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அச்சங்கத்தின் தலைவர் திரு. பீம் வாத்வா, குறிப்பிட்ட கால இடைவெளியில் சுங்கக்கட்டணம் செலுத்தும் முறையை நீக்குவது, டி.டி.எஸ். முறை தொடர்பான கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதில் சுமூக உடன்பாடு ஏற்படாததையடுத்து, நாடு முழுவதும் வரும் ஒன்றாம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார். 93 லட்சம் லாரிகள், சுற்றுலா வாகன ஓட்டிகள் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிவித்தார். இந்த வேலைநிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு, சுமார் ஆயிரத்து 700 கோடி ரூபாய் நாட்டிற்கு இழப்பு ஏற்படும் எனவும் திரு. பீம் வாத்வா தெரிவித்தார்.