டெல்லி பெய்த கனமழையால் தொற்றுநோய் பரவியுள்ளதாக தகவல் : நோய் தடுப்பு நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் தீவிரம்
Aug 28 2015 10:15AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி பெய்த கனமழை காரணமாக தொற்றுநோய் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. நோய் தடுப்பு நடவடிக்கையில் அம்மாநில அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் அண்மையில் பெய்த மழை காரணமாக, நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால், தொற்றுநோய் ஏற்பட்டு, சுமார் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கையில் டெல்லி மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், டெங்கு காய்ச்சல் பரவமால் தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என, டெல்லி அரசு தெரிவித்துள்ளது.