குஜராத்தில், மருதாணியைக் கொண்டு கைகளில் அழகிய ஓவியங்களை வரையும் நிகழ்ச்சியில் 24 ஆயிரம் மாணவிகள் கலந்துகொண்டு சாதனை
Aug 10 2015 10:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத்தில், மருதாணியைக் கொண்டு கைகளில் அழகிய ஓவியங்களை வரையும் நிகழ்ச்சியில், 24 ஆயிரம் மாணவிகள் கலந்துகொண்டு சாதனை படைத்தனர்.
சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக, குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஒரே இடத்தில், 24 ஆயிரம் பேர் கலந்துகொண்டு மருதாணியால் தங்களது கைகளில் ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பல்வேறு பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். அவர்கள், மருதாணியைக் கொண்டு தங்களது கைகளில் விதவிதமான அழகிய ஓவியங்களை வரைந்து திறமையை வெளிப்படுத்தினர். இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் தெரிவித்தனர். ஒரே நேரத்தில் 24 ஆயிரம் மாணவிகள் கலந்து கொண்டது அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியது. மாணவிகளின் ஓவியத்திறமையை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.