ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் தாக்குதல் - ஒருவர் பலி, இருவர் படுகாயம்
Aug 4 2015 1:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீரில் கிராமமக்களை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியிருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இன்று பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியதில் கிராமவாசி ஒருவர் பலியானார். இருவர் படுகாயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, தொடர்ந்து பாகிஸ்தான் படையினரின் தாக்குதல் நடத்தி வருகின்றனர். Akhnoor மற்றும் R.S. Pora பகுதிகளில் இன்று சர்வதேச எல்லைக் கோடு பகுதிகளில் இந்திய ராணுவத்தின் 12 நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் மீண்டும் துப்பாகிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தது அவர்களை விரட்டியடித்தனர். பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் இந்த தாக்குதலில் காயமடைந்தார்.