ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேன் மீது ரயில் என்ஜின் மோதிய விபத்தில் 2 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்
Jul 31 2015 7:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேன் மீது ரயில் என்ஜின் மோதிய விபத்தில் 2 பள்ளிக் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியின் லோகர்டாகா மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த ரயில் வேன் மீது வேகமாக மோதியது. இதில் அந்த வேனில் பயணம் செய்த 2 பள்ளிக் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.