கண்ணீரில் தத்தளிக்கும் ராமேஸ்வரம் - சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்ய அப்துல்கலாமின் உறவினர்கள் வேண்டுகோள்
Jul 28 2015 7:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் மறைவையடுத்து, அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்தியாவின் சிறந்த தேசபக்தராக விளங்கியவரின் உடல் அடக்கம் ராமேஸ்வரத்தில் நடைபெறவேண்டும் என அவரது உறவினர்கள் கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்திய இளைஞர்களின் உந்துசக்தியாக விளங்கிய முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் மறைவு நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது சொந்த ஊரான ராமேஸ்வரமும் துயரத்தில் மூழ்கியுள்ளது. நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு, அனைத்து தரப்பினரும் அப்துல்கலாமுக்கு கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்கி வருகின்றனர். அவரது மூத்த சகோதரர் திரு முத்துமீரான் மரைக்காயர் மற்றும் அவரது உறவினர்கள் ஆழ்ந்த துக்கத்தில் உள்ளனர். அப்துல்கலாம் கல்வி பயின்ற சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் அவரின் நினைவுகளை எடுத்துக்கூறி, தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மிகச் சிறந்த தேசபக்தராக வாழ்ந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் உடல் அடக்கம் ராமேஸ்வரத்தில் நடைபெறவேண்டும் என அவரது உறவினர்களும், பொதுமக்களும் கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.