மணிப்பூர் தலைநகர் இம்பாலில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
Jul 4 2015 10:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரின் பிஷ்னுபூர் மாவட்டத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இம்பாலில் இருந்து மிசோரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் டோர்பங்க் என்ற கிராமத்தில் வெடிகுண்டு கிடப்பதைப் பார்த்த பொது மக்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வெடிகுண்டை கைப்பற்றி செயலிழக்கச் செய்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மணிப்பூரில் ஆளுநர் மாளிகை அருகே கடந்த மாதம் 26-ம் தேதி குண்டிவெடிப்பு நிகழ்த்தப்பட்டது நினைவு கூரத்தக்கது.