ராஜஸ்தானில் 2 இளைஞர்களை தாக்கிய சிறுத்தையை கிராம மக்கள் அடித்துக் கொன்றனர்
Jul 4 2015 10:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மர் நகரத்தையொட்டியுள்ள கிராமப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கடந்த சில நாட்களாக இருந்து வந்தது. இந்நிலையில், அந்த சிறுத்தை, கிராமத்தைச் சேர்ந்த 2 இளைஞர்களை கடுமையாக தாக்கியது. இதனால் ஆபத்தான நிலையில் அந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுத்தை, இளைஞர்களை தாக்கியதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்றிரவு கிராமத்திற்குள் நடமாடிய சிறுத்தையை கிராம மக்கள் திரண்டு, துரத்திச் சென்று அடித்துக் கொன்றனர். கிராம மக்கள் சிறுத்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.