தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு வாகன பேரணி புதுச்சேரியில் நடைபெற்றது
Jul 4 2015 8:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீசார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு வாகன பேரணி, புதுச்சேரியில் நடைபெற்றது.
கடற்கரை சாலையில் தொடங்கிய பேரணியைகாவல்துறை தலைவர் திரு.பிரவீன் ரஞ்சன் தொடங்கிவைத்தார். பேரணியில் 200க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்டிச்சென்றனர். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், சாலை பாதுகாப்பு குறித்த குறுந்தகட்டை காவல்துறை தலைவர் வெளியிட்டதுடன், சாலைப்பாதுகாப்பு தொடர்பான டிஜிட்டல் விளம்பர பலகைகளையும் திறந்துவைத்தார்.