தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனது சொந்த உபயோகத்திற்காக 5 கோடி ரூபாய் செலவில் சொகுசு பேருந்து வாங்கியிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
Jul 4 2015 7:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானா முதலமைச்சர் திரு. சந்திரசேகர ராவ், தனது சொந்த உபயோகத்திற்காக 5 கோடி ரூபாய் செலவில், சொகுசு பேருந்து வாங்கியிருப்பதற்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக தெலங்கானா முதலமைச்சர் திரு. சந்திரசேகரராவ், 5 கோடி ரூபாய் அரசு செலவில், சொகுசு பேருந்து ஒன்றை வாங்கியுள்ளார். குண்டு துளைக்க முடியாத இந்தப் பேருந்து, தேவையற்றது என்றும், மாநிலத்தில் நிதி நெருக்கடி உள்ள நிலையில், இந்தப் பேருந்துக்காக 5 கோடி ரூபாய் அரசுப் பணத்தை முதலமைச்சர் விரையம் செய்திருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. முதலமைச்சராக தேர்வு பெறுவதற்கு முன்பு, சாதாரண வேனில், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்ட திரு. ராவ், இப்போது, முதலமைச்சர் ஆனவுடன், 5 கோடி ரூபாய் அரசுப் பணத்தை செலவிட்டு, இந்த சொகுசுப் பேருந்தை வாங்க வேண்டிய அவசியம் என்ன? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.