பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோதி, பாகிஸ்தான் பிரதமர் நவாஷ்ஷெரீப் பங்கேற்பு - இருநாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்
Jul 4 2015 6:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, வரும் 7ம் தேதி ரஷ்யா பயணம் மேற்கொள்வுள்ளதாக வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. மேலும், இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமரும் பங்கேற்கவுள்ளதால் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என டெல்லி தகவல் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவில் வரும் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. இதில், கலந்துகொள்வதற்காக வரும் 7ம் தேதி டெல்லியில் இருந்து பிரதமர் உஸ்பெகிஸ்தான் செல்கிறார். மேலும், ரஷ்ய மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் பங்கேற்கவுள்ளதால் இருநாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுதொடர்பாக நேரடியாக கருத்து தெரிவிக்காத வெளியுறவுத்துறை அமைச்சகம், பிரதமரின் ரஷ்யா பயணம் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டுத்தலைவர்களை இந்திய பிரதமர் சந்தித்து பேச்சுவார்தை நடத்துவது குறித்து இன்னும் இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளது.