ஜம்மு-காஷ்மீரில், பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை - 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - இந்திய ராணுவம் அதிரடி
Jul 3 2015 1:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீரில், பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள், எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பல நேரங்களில் தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கு உதவும் வகையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைப் பகுதியில், இந்திய ராணுவ நிலைகளை நோக்கி தாக்குதல் நடத்துகின்றனர். எனினும் மிகவும் விழிப்புடன் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை, பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடித்து வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள பாராமுல்லா மாவட்டத்தின் Uri மற்றும் Bonyar பகுதியில், தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், இந்திய பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.