தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியிலும், காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டம்
Jul 3 2015 10:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியிலும், காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் குற்றங்களை குறைக்கும் நோக்கத்துடன் நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டம் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரயில்நிலையம், பேருந்து நிலையம், கடற்கரை சாலை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள், முக்கிய சாலை சந்திப்புகள் என 103 இடங்களில் கேமராக்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. இதுவரை 99 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, கோரிமேட்டில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, தமிழகத்தைப் போன்று, புதுச்சேரி காவல் நிலையங்களிலும் CCTV கேமரா பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக முதுநிலை காவல்துறை கண்காணிப்பாளர் திரு. சந்திரன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு காவல்நிலையத்திலும், 5 கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கை காரணமாக காவல்நிலையங்களில் நடைபெறும் தினசரி நிகழ்வுகள் கண்காணிக்கப்படுவதுடன், விசாரணைக் கைதிகள் தாக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.