பாகிஸ்தானில் உள்ள காஷ்மீர் பகுதியில், இந்திய நிலைகளை நோக்கி சீன ராணுவம் நிறுத்தப்பட்டிருப்பதாக இந்திய ராணுவம் தகவல் : எல்லைப் பாதுகாப்புப் படைகள் குவிப்பு
Jul 3 2015 9:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் உள்ள காஷ்மீர் பகுதியில், இந்திய நிலைகளை நோக்கி சீன ராணுவம் நிறுத்தப்பட்டிருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்ததை அடுத்து, அப்பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் உள்ள காஷ்மீர் பகுதியில், எல்லைக்கோட்டை ஒட்டியுள்ள இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்து, சீன ராணுவம் நிறுத்தப்பட்டிருப்பதாக இந்திய ராணுவத் தலைமையகம் தெரிவித்திருந்தது. அதன் காரணமாக, எல்லைப் பாதுகாப்புப் படையின் ஒரு பிரிவு அங்கு உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த விவகாரம் குறித்து, சீன அரசின் கவனத்திற்கு இந்தியா கொண்டு சென்றது. இதனைத் தொடர்ந்து, காட்மாண்டுவில் செய்தியாளர்களிடம் பேசிய சீன பாதுகாப்புத்துறை இணை செயலர் Huang Xilian, சீனப் படைகள் காஷ்மீர் பகுதியில் நிறுத்தப்படவில்லை எனத் தெரிவித்தார். இதனை, இந்தியாவும், உலக நாடுகளும் தங்களது செயற்கைக் கோள் மூலம் உறுதிபடுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.