காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கமுடியாது : கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்
Sep 26 2023 6:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கமுடியாது என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தநிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கூடாது என்று கூறி கர்நாடகாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 87வது கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், தமிழக மக்கள் , 12 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் கேட்டுள்ளனர், ஆனால் தற்போது 5,000 கன அடி தண்ணீர் கூட திறக்க முடியாத சூழ்நிலையில் உள்ளதாகக் கூறினார்.