மணிப்பூரில், கடந்த ஜூலை மாதம் காணாமல் போன 2 கல்லூரி மாணவர்கள் சடலமாக கிடக்கும் புகைப்படம் வைரல் - 2 பேர் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம்
Sep 26 2023 11:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மணிப்பூரில் கடந்த ஜூலை மாதம் காணாமல் போன இரண்டு இளம் வயதினர், சடலங்களாக கிடக்கும் புகைப்படம் வைரலாகி பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில் விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
மெய்தெய் சமூகத்தைச் சேர்ந்த 17 வயதான ஹிஜாம் லிந்தோயிங்காம்பி மற்றும் 20 வயது பிஜாம் ஹெம்ஜித், ஆகியோர் காட்டுப் பகுதியில் ஆயுதம் தாங்கிய குழுவின் கண்காணிப்பில் இருக்கும் ஒரு புகைப்படமும் பின்னர் அவர்கள் உடல்கள் தரையில் கிடக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இது மெய்தெய் சமூகத்தினரை கொதிப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், குற்றவாளிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியை தொடங்கியுள்ளதாகவும் மக்கள் அமைதி காக்கவும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.