ஆலயத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட அறிவாலயம் என பெயர் வைத்துள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்
Sep 21 2023 7:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆலயத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட அறிவாலயம் என பெயர் வைத்துள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். புதுச்சேரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான சுத்தம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார். நீட் தேர்வுவை வைத்து மாணவர்கள் பலர் பயன்பெறும் சூழலில், சில அரசியல் கட்சிகள் அதைவைத்து அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டினார். ஆலயத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அறிவாலயம் என பெயர் வைத்துள்ளதாகவும் மறைமுகமாக திமுகவை விமர்சனம் செய்தார்.