தீவிரவாதிகளின் புகலிடமாக கனடா மாறியுள்ளதாக மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி பகிரங்க குற்றச்சாட்டு
Sep 21 2023 7:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தீவிரவாதிகளின் புகலிடமாக கனடா மாறியுள்ளதாக மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குறித்து ஆதாரத்துடன் கனடா அரசுக்கு தகவலளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார். தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் புகலிடமாக கனடா மாறியுள்ளது எனவும் தனது நற்பெயரை கனடா அரசு காப்பாற்றிகொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும் விசா நிறுத்தபட்டதற்கு கனடா அரசே காரணம் எனவும், உரிய விசா வைத்திருப்பவர்கள் கனடாவிலிருந்து, இந்தியா வர எந்த தடையும் இல்லை எனவும் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.