கேரளாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்திய காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு
Jun 7 2023 4:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்திய காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த போலீசார் போராட்டத்தை தடுத்து நிறுத்த முயன்ற போலீசாருக்கும், காங்கிரஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தை தலைமையேற்ற காங்கிரஸ் கட்சி எம்.பி. சுரேஷை போலீசார் கைது செய்தனர்.