மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உடன் மல்யுத்த வீராங்கனைகள் பேச்சுவார்த்தை : பாலியல் புகார் தொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Jun 7 2023 3:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பெண் ஒருவரை நியமிக்க வேண்டும் என வீரர், வீராங்கனைகள் வலியுறுத்தியுள்ளனர். மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் கூறி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். அவர்களை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதை அடுத்து அவரது இல்லத்திற்கு சென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மல்யுத்த கூட்டமைப்புக்கு பெண் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும், தங்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 5 நிபந்தனைகள் முன் வைத்தனர்.