ரயில் விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2,000 நோட்டு : திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வழங்கியதால் சர்ச்சையாக்கிய பாஜக
Jun 7 2023 11:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரிணமுல் காங்கிரஸ் கட்சி வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரை மம்தா பானர்ஜி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கொடுத்துள்ளனர்.
இதனை மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் விமர்சித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள திரிணமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் குணால் கோஷ், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மத்தியில் ஆளும் பாஜக அரசுதான் அறிமுகப்படுத்தியதாகவும், இது கறுப்பு பணம் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.