சுரினாம் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு செர்பியா புறப்பட்டு சென்றார்... ஜூன் 9ஆம் தேதி வரை செர்பியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் முர்மு
Jun 7 2023 11:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சுரிநாம் நாட்டின் பயணத்தை முடித்துக் கொண்டு செர்பியாவிற்கு புறப்பட்டு சென்றார்.
சுரினாம் மற்றும் செர்பியா நாடுகளுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 6 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக, தென் அமெரிக்க நாடான சுரினாமுக்கு பயணம் மேற்கொண்ட அவர் அந்நாட்டு அதிபர் சந்திரிகாபெர்சாத்தை சந்தித்து இருநாடுகளின் நல்லுறவு குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். சுற்றுப்பயணத்தில் நிறைவாக இந்திய வம்சாவளிகளை சந்தித்து உரை நிகழ்த்திய முர்மு செர்பியா நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். செர்பியாவில் முர்மு ஜூன் 9 வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.