ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 83 உடல்களை இதுவரை அடையாளம் காண முடியவில்லை : வெயிலின் தாக்கத்தால் உடல்கள் வேகமாக அழுகி வருவதாக அதிகாரிகள் கவலை
Jun 7 2023 1:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசா ரயில் விபத்தில் பலியானோரின் உடல்கள் சவக்கிடங்கில் வைக்க இடமின்றி குளிரூட்டப்பட்ட லாரிகளில் வைக்கப்பட்டுள்ளன. ரயில் விபத்தில் இறந்தவர்களில் 83 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளன. இதையடுத்து புவனேஸ்வரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் குளிரூட்டப்பட்ட லாரிகளில் இறந்தவர்கள் சிலரின் உடல்களை வைத்து ரயில்வே அதிகாரிகள் பாதுகாத்து வருகின்றனர்.
மிகவும் அழுகிய அடையாளம் காண இயலாத உள்ள உடல்களை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கும் முன் டி.என்.ஏ சோதனை நடத்தி அடையாளம் காண வேண்டி உள்ளது.