கர்நாடகாவில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதி விபத்தில் 5 பேர் பலி : 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
Jun 6 2023 2:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக மாநிலம் யாத்கிரி மாவட்டம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இன்று அதிகாலை பலிசக்ரா கிராஸ் அருகே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார், காரில் இருந்த 5 பேரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 13 பேரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.