ஒடிசா ரயில் விபத்தில் 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல் : உயரழுத்த மின்கேபிள்கள் அறுந்து விழுந்ததில் இறந்திருக்கலாம் என சந்தேகம்
Jun 6 2023 2:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . ஒடிசா மாநிலம் பாலசோரில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 275 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களில் 101 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்திருந்தாலும், 40 பேரின் உடலில் காயங்களோ, இரத்தப்போக்கோ இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டபோது, மேல்நிலை மின்சார கேபிள்கள் அறுந்து விழுந்தால் மின்சாரம் தாக்கி இந்த 40 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.