ரூ. 40 கோடி வருமானத்தைக் குறைத்து காட்டிய பிபிசி நிறுவனம் : திருத்தப்பட்ட வருமானவரி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Jun 6 2023 2:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
40 கோடி ரூபாய் வருமானத்தைக் குறைத்து காட்டியதாகக் கூறி பிபிசி நிறுவனம் மீண்டும் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய வரிவிதிப்பு வாரியம் உத்தரவிட்டுள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்ட பிபிசி நிறுவனம், வரி ஏய்ப்பு மற்றும் அந்நியச் செலாவணி விதிகளை மீறியதாகக் கூறி வருமான வரி சோதனைக்கு ஆளானது. குஜராத் கலவரம் குறித்த சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை ஒளிபரப்பியதால், இது அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கை என்று பிபிசி குற்றம்சாட்டியிருந்தது. இந்த நிலையில், பிபிசி நிறுவனத்திடம் நடத்திய சோதனையில் 40 கோடி ரூபாய் வருவாயை குறைத்து காட்டியது, மின்னஞ்சல் தகவல் பரிமாற்றம் மூலம் அம்பலமாகி இருக்கிறது. அதனை பிபிசி நிறுவனமும் ஒத்துக்கொண்டதாக மத்திய வரிவிதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.